தளபதி விஜய் நடிப்பில் சென்ற ஜனவரி மாதம் வெளியான படம் வாரிசு படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். தென் இந்திய அளவில் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவர்தான் தமன். இவர் தெலுங்கில் போட்ட பல்வேறு பாடல்கள் சூப்பர்ஹிட் ஆகியுள்ளது. இப்படி முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து வரும் தமனுக்கு சொந்தமாக ம்யூசிக் ஸ்டூடியோ இல்லையாம். இதன் காரணமாக அவர் பார்க் ஹயாத் ஹோட்டலில் ரூம் வாடகைக்கு எடுத்து அங்கே இசையமைத்து வருகிறாராம். அங்கு அவரது பெயரில் பல்வேறு அறைகள் புக் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் தமன் மகேஷ் பாபுவின் குண்டூர் கரம் படத்திற்கு பின் தமன் இசையமைப்பாளர் பதவியில் இருந்து ஓய்வு பெறுவதாக தகவல்கள் பரவுகிறது. இதற்கு பதிலளித்த தமன், ‘தனது ஸ்டுடியோவிற்கு அருகில் மோர் கடை தொடங்குகிறேன். வயிற்று அழற்சி இருப்பவர்களுக்கு இலவசமாகவும் தருகிறேன். தயவுசெய்து என் நேரத்தை வீணாக்காதீர்கள். எனக்கு நிறைய வேலை இருக்கிறது’ என நக்கலாக ட்வீட் செய்துள்ளார்.