புதுச்சேரியில் சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற சம்பவத்தில் நடிகை சாக்ஷி அகர்வால் கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

புதுச்சேரியில் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமி உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. சிறுமியின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வைத்திக்குப்பம் இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. சோலை நகரில் கடந்த சனிக்கிழமை 9 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொடூர குற்றத்தில் ஈடுபட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளன்னர். அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதற்கு பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகை சாக்ஷி அகர்வால் இது தொடர்பாக தனது இன்ஸ்டாவில், “பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு பொதுமக்கள் முன்னிலையில் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். அவர்களை தூக்கிலிட வேண்டும்! இத்தகைய கொடூரமான செயலை செய்தவர்களின் வயதைக் கருத்தில்  கொள்ள்ளக்கூடாது. #JusticeforArthi” T குறிப்பிட்டுள்ளார்