
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. அவ்வபோது மழை பெய்து குளிர்வித்து விட்டு செல்கிறது. வெயில் வாட்டி வதைப்பதால் பகல் நேரம் மக்கள் வெளியே செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.
இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின் படி ஜூன் 12-ஆம் தேதி நீலகிரி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 6 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.