தமிழகத்தில் பள்ளி கல்வியில் வட்டார கல்வி அதிகாரி காலி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஜூன் 5ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கான விண்ணப்ப பதிவு ஜூலை 12ஆம் தேதி இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதனைத் தொடர்ந்து விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள தற்போது வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதற்கான வழிமுறைகளை www.trb.tn.gov.inஎன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதனை பின்பற்றி பட்டதாரிகள் ஜூலை 13 முதல் ஜூலை 17ஆம் தேதி வரை தங்களின் விண்ணப்பங்களின் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.