இந்திய தபால் துறை அதிர்ஷ்ட குலுக்கல் போட்டி ஒன்றை நடத்துவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி ஒன்று வைரலாகி வருகின்றது. அதில் உங்கள் தனிப்பட்ட விவரங்களை பதிவிட்ட பிறகு உங்களுடைய வங்கி கணக்கில் 6000 ரூபாய் செலுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இது பொய்யான தகவல் என்று மத்திய அரசின் PIB Fact check நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் இது போன்ற செய்திகளை நம்பி மக்கள் யாரும் ஏமாற வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.