தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் தகுதி உள்ள பெண்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து டிசம்பர் மாதத்திற்கான ஆயிரம் ரூபாய் உரிமை தொகை இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் பணி தொடங்கியுள்ளது. மேல் முறையீடு செய்த தகுதியான மகளிருக்கும் இந்த மாதத்திற்கான ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்பட்டுள்ளது. உடனே உங்கள் ஃபோனில் பணம் வரவு வைக்கப்பட்டதற்கான குறுஞ்செய்தி வந்துவிட்டதா என்பதை பார்க்கவும். இல்லையென்றால் கவலை வேண்டாம் இன்றுக்குள் உங்களது வங்கி கணக்கில் பணம் வந்துவிடும்.