வங்கி ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இந்த வருடமே ஐந்து நாட்கள் வேலை என்ற முறையை நடைமுறைப்படுத்த வாய்ப்பு உள்ளது. நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்தால் ஜூன் முதல் அமலுக்கு வரும். இருந்தாலும் ஐந்து நாள் வேலை நாட்களுடன் வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்க வேலை நேரத்தை குறைக்க மாட்டோம் என்று வங்கி ஊழியர்களின் ஐக்கிய மன்றம் முன்னதாக மத்திய அமைச்ச நிர்மலா சீதாராமனுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்தது. இது தவிர சம்பள உயர்வு குறித்து அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிட வாய்ப்புள்ளது