சோஷியல் மீடியாவில் ஒரு சின்னக் குழந்தையின் தைரியமான வீடியோ வைரலாகி வருகிறது. லிஃப்டில் தவறுதலாகத் தனியாக மாட்டிக்கொண்ட அந்தக் குழந்தை, பயப்படாமல் கண்களை மூடி, கைகளைக் கூப்பி இறைவனிடம் வேண்டத் தொடங்குகிறது. சில நொடிகளிலேயே லிஃப்ட் கதவு தானாகத் திறந்து, குழந்தை பத்திரமாக வெளியே வந்துவிடுகிறது. இதைப் பார்த்தவர்கள் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைகிறார்கள்.
A little boy got stuck in an elevator and softly prayed, “Lord, please open the door. I’m a little scared, but I know You’re with me.” 🙏
Such innocent faith, it truly melts your heartpic.twitter.com/ZJZ3a5U1zW
— Restoring Your Faith in Humanity (@HumanityChad) October 27, 2025
பலர் இதை “அற்புத நொடி” என்று சொல்லி, குழந்தையின் தூய்மையான நம்பிக்கையைப் புகழ்கிறார்கள். ஒரு பயனர், “லிஃப்ட் சென்சார் மற்றும் டெக்னீஷியனால் திறந்தது, மாயமில்லை; அலாரம் அழுத்தி, அமைதியாகக் காத்திருக்கப் பழகுங்கள்” என்று எழுதியுள்ளார். மற்றொருவர், “இப்படி எளிமையாக இறைவனை நம்பியது எப்போது?” என்று உருக்கமாகக் கேட்கிறார். இந்த வீடியோ, கடின சூழலிலும் நம்பிக்கையை இழக்காமல் இருக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது.
