சேலம் மாவட்டம் பனமரத்து பட்டி பொய்மான் கரடு பகுதியில் அன்னபூர்ணா ஹோட்டல் அமைந்துள்ளது. அந்த ஹோட்டலுக்கு முன்பு ஒரு லாரி சாலையோரம் நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் எதிர்பாராதவிதமாக லாரி பின்புறம் மோதியது. இந்த விபத்தில் சேலத்தைச் சேர்ந்த கௌதம், கன்னியாகுமரியை சேர்ந்த காம்கோ ஆகிய இருவரும் உடல் நடுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இருவரும் பாண்டிச்சேரி மகாத்மா காந்தி மெடிக்கல் கல்லூரியில் மருத்துவ படிப்பு படித்து வந்துள்ளனர்.

இந்த விபத்தில் சேலத்தைச் சேர்ந்த ஜெகன்நாத், தருண், சத்தியப் பிரவீன் மூன்று பேரும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்த மூன்று பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் உயிரிழந்த இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.