சேலம் மாவட்டம் குறுக்குப்பட்டி பகுதியை சேர்ந்த பெருமாயி என்ற 55 வயது பெண் ஒருவர் வாய் பேச முடியாத நிலையில் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த 12ஆம் தேதி அந்த பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுவன் பெருமாயியை தகாத உறவுக்கு அழைத்து உள்ளான். பெருமாயி அதற்கு மருந்து சிறுவனை திட்டி உள்ளார். எங்கே அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் சொல்லி விடுவாரோ என்ற பயத்தில் சிறுவன் பெருமாயி தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளான். போலீசார் சிறுவனை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.