சென்னை தாழங்குப்பம் உலகநாதபுரம் பகுதிகளில் கனரக வாகனங்கள் அதிகளவில் செல்வதால் சாலைகளில் நடக்க முடியவில்லை என கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அப்பகுதிக்கு கனரக வாகனங்கள் வராது என்று உறுதியளிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று அப்பகுதியில் நடந்து சென்ற அருள்தாஸ் என்பவர் லாரியில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதன் காரணமாக கோபமடைந்த பொதுமக்கள் காவல்துறையினரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.