இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் வசித்து வந்தவர் சீக்கிய வம்சாவளியை சேர்ந்த சிமர்ஜித்சிங் நங்கபால். இவருக்கும் வேறு சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியுள்ளது. இதில் அந்த கும்பல் சிமர்ஜித்சிங்கை கத்தியால் தாக்கியுள்ளது. இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை காவல்துறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.