ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து குஜராத் அணியில் ரோகித் சர்மா இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை கிரிக் பஸ் ஆதாரம் மற்ற தகவல் என நிராகரித்துள்ளது. இதனால் மும்பை அணியின் கேப்டனாக ரோகித் சர்மா தொடர்வார் என்பது உறுதியாகி உள்ளது. அதேசமயம் குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா மீண்டும் மும்பை அணிக்கு வருவார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இருந்தாலும் இது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இல்லை.