இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தொடர்பான ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. இந்த வீடியோவில், ரோஹித் சர்மா அணிந்திருந்த சுமார் 3.25 கோடி ரூபாய் மதிப்புள்ள விலையுயர்ந்த கைக்கடிகாரத்தை மர்ம நபர் ஒருவர் திருட முயன்றதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தின் போது ரோஹித் சர்மா மிகுந்த கோபமடைந்து, அந்த நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும், அங்கு ஒரு சிறிய அளவிலான தள்ளுமுள்ளு ஏற்பட்டதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த எதிர்பாராத மோதலால் அந்த இடமே சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
Rohit Sharma Fans tried to snatch his 3.25 Cr “Giraffe” watch from his wrist. And suddenly he close the mirror. pic.twitter.com/vMIQFxcdxt
— Aman (@Proteinkohli) May 8, 2026
“>
மேலும் பொது இடத்தில் ரசிகர்களின் கூட்டத்திற்கு இடையே இந்த சம்பவம் நடந்ததாகத் தெரிகிறது. தனது பாதுகாப்பை உறுதி செய்ய முயன்ற ரோஹித் சர்மா, திருட்டு முயற்சியைத் தடுத்து நிறுத்தியதோடு, அந்த நபரின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
இந்நிலையில் கிரிக்கெட் நட்சத்திரங்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை இந்த நிகழ்வு மீண்டும் எழுப்பியுள்ளது. தற்போது இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், ரோஹித் சர்மாவின் ரசிகர்கள் இச்சம்பவத்திற்கு சமூக வலைதளங்களில் தங்களது கண்டனங்களையும் அதிர்ச்சியையும் பதிவு செய்து வருகின்றனர்.
