நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் டவுன் பொம்மி தெருவில் அருண்லால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நகர தி.மு.க செயலாளராக உள்ளார். இவரது மனைவி தேவிபிரியா ராசிபுரம் நகராட்சி 13-வது வார்டு தி.மு.க கவுன்சிலராக இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ரித்திகா ஸ்ரீ, மோனிஷா என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இதில் ரித்திகா ஸ்ரீ பெங்களூரில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். மோனிகா ஸ்ரீ 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரோஸ் மில்க்கில் மோனிகா ஸ்ரீக்கு விஷம் கலந்து கொடுத்துவிட்டு கணவன் மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்தனர்.

மூத்த மகள் ரித்திகா ஸ்ரீ உடல் நலம் பாதிக்கப்பட்டதால் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அதற்கு 18 லட்சம் ரூபாய் செலவு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அருண்லால் நகைக்கடையில் புதிய வருமானம் இல்லாமல் சிரமப்பட்டு வந்துள்ளார். கடன் தொந்தரவு அதிகமாக இருந்தது. எனவே கடன் பிரச்சனையால் அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.