அரசின் சலுகைகளை பெறுவதற்கு ரேஷன் அட்டை என்பது மிக முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் வீட்டில் புதிதாக குழந்தை பிறந்து விட்டால் அவர்களையும் அந்த அட்டையில் சேர்க்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்று சிலருக்கு சந்தேகம் இருக்கும். குழந்தையின்பெயரை சேர்ப்பதற்கு அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக அப்ளை செய்யலாம்.

அதாவது அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று add member to ration card என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும்.

அதில் கேட்கும் விவரங்களை சரியாக பூர்த்தி செய்ய வேண்டும்.

குழந்தையின் பிறப்பு சான்றிதழ், குடும்ப தலைவரின் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு நகல், குழந்தையின் ஆதார் ஆகியவற்றை கொண்டு பதிவிட வேண்டும்.

Check beneficiary status மூலமாக பெயர் சேர்க்கப்பட்டு விட்டதா இல்லையா என்பதை கடைசியில் சரி பார்க்க வேண்டும்