தமிழக ரேஷன் கடைகளில் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ரேஷன் கடைகளில்  நடைபெறும் குளறுபடிகளை தவிர்ப்பதற்கு அரசு பல முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் தொடர்ந்து பல குற்றச்சாட்டுகள் ஏற்பட்டு தான் வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்குகளில் இருந்து கடைகளுக்கு அனுப்பப்படும் அத்தியாவசிய பொருட்கள்  எடை குறைவாக இருப்பதாக ரேசன்  கடை ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.

இந்நிலையில் இதுபோன்ற பிரச்சினைகளை தடுக்க ரேஷன் பொருட்களின் சுகாதாரம் மற்றும் எடையை உறுதி செய்ய தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது.