சென்னை கிளம்பாக்கம் ரயில் நிலையம் ஆறு மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படும் என ரயில்வே பொது மேலாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், புதிய முனையமாக வில்லிவாக்கம் ரயில் நிலையம் தரம் உயர்த்தப்பட உள்ளது.

விரிவான திட்ட அறிக்கை முடிக்கப்பட்டு அடுத்த மூன்று மாதங்களில் நிதி ஒதுக்கி கட்டுமானம் தொடரும் என்று தெரிவித்துள்ளார். மேலும் பணிகள் முடிக்கப்பட்டு கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறக்கப்பட்டால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.