தமிழகத்தில் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் 6000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் டிசம்பர் 16ஆம் தேதி முதல் டோக்கன் வழங்கப்பட உள்ளது.

இந்த நிலையில் குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் அந்தந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என்றும் விண்ணப்பங்களை பதிவு செய்தால் ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் நிதி வழங்கப்படும் என்றோம் அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.