தமிழகத்தில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியராக பணியாற்றும் இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை பெறுவதற்கும் தேசிய தகுதி தேர்வான நெட் தேர்வு வருடத்திற்கு இரண்டு முறை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி டிசம்பர் ஆறாம் தேதி நெட் தேர்வு சென்னை மற்றும் ஆந்திராவில் நடத்தப்பட்ட நிலையில் டிசம்பர் நான்காம் தேதி புயல் காரணமாக மாணவர்கள் பலரும் தேர்வில் கலந்து கொள்ள முடியவில்லை.

இதனால் நெட் தேர்வை எழுத முடியாதவர்களுக்கு மறு தேர்வு வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் டிசம்பர் 6ஆம் தேதி தேர்வு எழுத முடியாமல் போனவர்களுக்கு மட்டும் டிசம்பர் 14ஆம் தேதி இன்று தேர்வு நடைபெற இருப்பதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை www.nta.ac.in  என்ற இணையதளத்தில் அறியலாம்