தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ரேஷன் பொருட்கள் அனைத்தும் மக்களுக்கு எவ்வித குறையும் இல்லாமல் சென்றடைய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதேசமயம் ஒவ்வொரு மாதமும் மக்கள் குறைகேட்பு முகாம் நடத்தப்பட்டு வரும் நிலையில் மார்ச் மாதத்திற்கான பொது விநியோக த் திட்டத்தை 19 மண்டல உதவியாளர் அலுவலகங்களில் மார்ச் 11ஆம் தேதி அதாவது இன்று  காலை பத்து மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை நடைபெற உள்ளது.

இந்த முகாமில் ரேஷன் அட்டையில் திருத்தம் மேற்கொள்ளுதல் மற்றும் நியாய விலை செல்ல முடியாத மூத்த குடிமக்களுக்கு அங்கீகாரம் சான்று வழங்கப்படும். மேலும் ஏதாவது குறைகள் இருந்தால் மக்கள் இந்த முகாமில் தெரிவிக்கலாம் எனவும் அரசு அறிவித்துள்ளது