தமிழக ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு இலவசமாக அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி, கோதுமை, பாமாயில் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் ஏழை எளிய மக்கள் இதனை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசின் நிதி உதவியும் ரேஷன் கடையின் மூலமாகவே வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மத்திய அரசின் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டம் 2024 மார்ச்சுக்குள் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தை மத்திய அரசு 3 கட்டங்களாக செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி தற்போது மதிய உணவு திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்திற்கு அரிசி வழங்கப்பட்டு வருகிறது. எனவே 3ஆம் கட்டமாக பொது விநியோக திட்டத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.