ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி வெளியாகியுள்ளது. அதாவது, இலவச ரேஷன் வாங்குபவர்கள் ஜூன் 30ம் தேதியை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இல்லையென்றால் ரேஷன் வசதியினை பெறுவதில் சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

இதை தடுக்க நீங்கள் ஆதார் மற்றும் ரேஷன் கார்டை கட்டாயம் இணைக்கவேண்டும். ரேஷன் கார்டை ஆதாருடன் இணைக்கும் தேதி தற்போது நெருங்கி வருவதால் இதுகுறித்து அரசு சார்பாக அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. ஆகவே ரேஷன் கார்டை ஆதார் உடன் இணைத்தால் தான் உணவு தானியங்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.