தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடுவதற்காக ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதில் சர்க்கரை, பச்சரிசி மற்றும் கரும்பு ஆகியவற்றுடன் ஆயிரம் ரூபாய் அடங்கிய தொகுப்பு இருக்கும். இந்த நிலையில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வருவதை முன்னிட்டு ஆயிரம் ரூபாய்க்கு பதிலாக 2000 ரூபாய் வழங்குவது தொடர்பாக அரசு பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது