தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. தற்போது ஓரளவு மலை குறைந்துள்ள நிலையில் பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ள நான்கு மாவட்டங்களுக்கு நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி முதல் கட்டமாக 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளனர். அது மட்டுமல்லாமல் தங்களது ரசிகர் மன்றங்கள் மூலமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களின் இந்த சேவைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்..