தமிழகத்தில் வட மாநிலத்தவர்கள் மற்றும் பிற மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அரிசி மற்றும் கோதுமை உள்ளிட்ட பொருட்கள் கேட்டால் மறுக்காமல் வழங்க வேண்டும் என்று அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது. ரேஷன் கடையில் அட்டைதாரர்கள் அனைவரும் பொருட்களை வாங்குவதில்லை. 75 சதவீதம் பேர் மட்டுமே பொருள்களை வாங்குகின்றனர். மீதமுள்ள 25 சதவீதம் பொருள்களை வெளிமாநிலம் மற்றும் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு வழங்க வேண்டும் என்று ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.