ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் அரசு சார்பில் ஒவ்வொரு மாதமும் மானிய விலையில் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பண்டிகை காலத்தை முன்னிட்டு மேற்குவங்கம் மாநிலத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அனைத்து உணவு பொருட்களுடன் சர்க்கரை மற்றும் கோதுமை மாவு மானிய விலையில் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 18ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் செயல்படுத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

மாநில உணவு வழங்கல் துறையின் அறிக்கையின்படி அந்தியோதயா அன்ன யோஜனா சிறப்பு முன்னுரிமை அட்டைதாரர்கள் அனைவருக்கும் ஒரு கிலோ மாவு 28 ரூபாய்க்கும் சர்க்கரை ஒரு கிலோ 32 ரூபாய்க்கும் வழங்கப்படும். அது மட்டும் அல்லாமல் 21 கிலோ அரிசி இலவசமாகவும் ஒரு குடும்பத்திற்கு 13 கிலோ கோதுமை அல்லது கோதுமை மாவுடன் ஒரு கிலோ சர்க்கரை இலவசமாகவும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.