தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடந்தது. அப்போது ஒருசில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தயாரிப்பாளர்களிடம் நடிப்பதற்காக முன்பணம் வாங்கிவிட்டு நடிக்க வராமல் சிக்கலை ஏற்படுத்திய சில நடிகர்களுக்கு ஒத்துழைப்பு தர மாட்டோம் என்பதும் அத்தீர்மானத்தில் ஒன்று ஆகும். அந்த நடிகர்கள் யார் என்பது குறித்து தயாரிப்பாளர் சங்க தரப்பில் வெளியிடப்படவில்லை.

எனினும் சிம்பு, விஷால், எஸ்ஜே சூர்யா, அதர்வா, யோகிபாபு போன்றோர் தான் அவர்கள் என அதிகாரப்பூர்வமில்லாத தகவல் பரவியது. குறிப்பாக அப்பட்டியலில் சிம்பு, விஷால் பெயரை வேண்டுமென்றே சிலர் பரப்பியுள்ளதாக கூறுகிறார்கள். இதனிடையே தயாரிப்பாளர் சங்கத்தைப் பொறுத்தவரை அந்த நடிகர்கள் யார், யார் என்று வெளியிடாமல் இவ்விவகாரத்தை சுமூகமாக பேசித் தீர்த்துக்கொள்ள முடிவு செய்துள்ளார்கள் எனத் தெரிகிறது.