வெள்ளம் பாதித்த நெல்லை மாவட்டத்தில் ரேஷன் கடைகள் மூலம் ரூ.6,000 நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வரை 92% நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரூ.6,000 நிவாரணம் பெற நாளை கடைசி நாள் என்றும் நிவாரணம் பெறாதவர்கள் நாளைக்குள் ரேஷன் கடை சென்று பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜன.4 முதல் வழக்கம்போல் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது.