தமிழகத்தில் புயலால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பிரபலங்கள் பலரும் நிதி உதவி வழங்கி வரும் நிலையில் தமிழக அரசு 6000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து 6000 ரூபாய் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட உள்ளது.

இதற்கான டோக்கன் வழங்கும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நிவாரணம் கிடைக்காதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் மீண்டும் விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பம் வழங்கப்படும். இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தால் அதை சரி பார்த்து அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.