நாடு முழுவதும் அரசி விலை உயர்ந்துவருவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பாரத் அரிசியை கிலோ ரூ.29க்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அடுத்த வாரம் முதல் விற்பனைக்கு வரும் இந்த Amazon, Flipkart, Jiomart போன்ற இ-காமர்ஸ் தளங்களிலும் வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர். நாட்டில் அரிசி விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் இந்த முடிவு நடுத்தர மக்களுக்கு நிம்மதியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.