தமிழகத்தில் சாலை மற்றும் தெருக்களில் மாடுகள் நடமாடுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சாலைகளில் சுற்றி தெரியும் மாடுகளுக்கான பராமரிப்பு மற்றும் அபராத தொகை மாடு ஒன்றுக்கு 2000 ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மாடுகளை பராமரிக்க மாடுகள் பிடிக்கப்பட்டதிலிருந்து மூன்றாம் நாள் முதல் நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். மீண்டும் அதே மாடுகள் பிடிபட்டால் பத்தாயிரம் ரூபாய் அபராத தொகை செலுத்த வேண்டும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.