சீனாவில் ஹங்காய் நகரத்தை சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய வீட்டில் பணியாற்ற பணிப்பெண் தேவை என செய்தித்தாளில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அந்தப் பெண்மணிக்கு மாத சம்பளமாக 15 லட்சம் வீதம் ஒரு வருடத்திற்கு மட்டுமே இரண்டு கோடி சம்பளம் வழங்க உள்ளதாகவும் கூறியுள்ளார். குறிப்பாக பணிப்பெண்ணை தேர்ந்தெடுப்பதற்கான பல தகுதிகளும் அதில் இடம்பெற்றுள்ளன.

அதாவது தன்னுடைய வீட்டில் வேலை பார்க்கும் பெண்மணி 165 சென்டிமீட்டர் உயரம், 55 கிலோவிற்கு குறைவான எடை, 12 ஆ வகுப்பிற்கு மேல் படித்தவராக இருக்க வேண்டும் எனவும், நேர்த்தியான தோற்றம், சுத்தமான உடை, ஆட மற்றும் பாடத் தெரிந்திருக்க வேண்டும் என இந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பெண்ணின் வீட்டில் ஏற்கனவே வருட சம்பளமாக ரூபாய் இரண்டு கோடி அளவில் இரண்டு பெண்கள் 12 மணி நேரம் வேலை செய்து வருகின்றன. ஆனாலும் மீண்டும் ஒரு பெண்மணியை வேலைக்கு சேர்க்க அவர் விரும்புகிறார்.