தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாத ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் தகுதியுடைய 1.06 கோடி பெண்களுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அடுத்த தவணை எப்போது வழங்கப்படும் என பெண்களுக்கு கேள்வி எழுந்துள்ள நிலையில் ஏற்கனவே வழங்கப்பட்ட பெண்களுக்கும் நிராகரிக்கப்பட்டு மீண்டும் விண்ணப்பித்துள்ள தகுதியான பெண்களுக்கும் அக்டோபர் 13 முதல் 15ஆம் தேதிக்குள் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.