தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில் தகுதியுள்ள 1.06 கோடி குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது. இந்தத் திட்டம் போலவே இந்த மாதம் பெண்களுக்கு தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், விதவைகள் மற்றும் நலிந்த குடும்ப பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்பதற்காக ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி வாங்க ஒரு லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.