தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த உயர் கல்வியில் சேரும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் ஆயிரம் ரூபாய் அரசு சார்பில் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க தங்கள் பயிலும் கல்வி நிறுவனத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது ஆதார் அட்டை, மாற்றுச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அதன் பிறகு வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.