தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை சமீபத்தில் தொடங்கப்பட்ட நிலையில் செப்டம்பர் 14ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகளின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது. முதல்முறையாக இந்தத் திட்டம் அமல்படுத்தப்படுவதால் அதில் பல குழப்பங்கள் உள்ளன. சிலர் பணம் வந்ததாக எஸ்எம்எஸ் வந்தும் பணத்தை எடுக்க ஏடிஎம் கார்டு வரவில்லை என்று கூறுகின்றனர். இதனைப் போலவே ஏடிஎம் கார்டு வராதவர்களுக்கு விரைவில் வங்கியில் இருந்து ஏடிஎம் கார்டு வரும் எனவும் அதனை ஆக்டிவேட் செய்ய உடனே வங்கியை அணுகவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.