தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்கான தகுதியான விண்ணப்பத்தாளர்கள் பட்டியலை தயாரிக்கும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

தமிழகத்தில் ஒரு கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைப்பேசி வழியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க வீடு வீடாக நடத்தப்படும் கள ஆய்வு மற்றும் விண்ணப்பத்தில் இருக்கும் சந்தேகங்கள் உள்ளிட்ட அனைத்து பணிகளும் நாளை அதாவது செப்டம்பர் ஐந்தாம் தேதிக்குள் முடித்து தகுதியான பட்டியலை அனுப்ப அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.