தமிழகத்தில் திமுக தனித்துப் போட்டியிட்டால் கட்டாயம் ஆதரவு தெரிவிப்பேன் என சீமான் கூறியுள்ளார். கோவையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சீமான், 20 தொகுதிகள் என்றாலும் நேரடியாக திமுக போட்டியிட்டால் வேட்பாளரை நிறுத்த மாட்டேன் என்று கூறினார். மேலும் காவிரி நீர் பங்கீடு முழுமையாக கிடைத்தால் திமுகவுக்கு 40 தொகுதிகளிலும் ஆதரவு தெரிவிப்பேன் என்றும் நாடாளுமன்றம் செல்ல தான் விரும்பவில்லை, தமிழ் தேசம் தமிழ்நாடு தான் தனது கனவு எனவும் அவர் கூறியுள்ளார்.