தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்த உடன் பயனாளிகளின் மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது.

அதில் மகளீரின் உழைப்புக்கு அங்கீகாரம் அளிக்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள் வாழ்த்துக்கள்! இன்று முதல் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை கிடைக்கும். உங்களில் ஒருவன் ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சர் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே குடும்பத் தலைவிகள் அனைவரும் உங்கள் போனுக்கு இந்த மெசேஜ் வந்துள்ளதா என சரி பார்த்துக் கொள்ளுங்கள்.