தமிழில் ‘விவேகம்’, மலையாளத்தில் ‘லூசிஃபர்’, ‘கடுவா’ ஆகிய படங்களில் நடித்துள்ள பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் ரூ.1.55 கோடியை இழந்துள்ளார். ஒரு திரைப்பட தயாரிப்பாளரும் மற்ற இரண்டு கூட்டாளிகளும் விவேக் ஓபராயை திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் முதலீடு செய்யுமாறு கூறியுள்ளனர். இதன் மூலம் நல்ல லாபம் தருவதாக ஏமாற்றியுள்ளனர்.

இதனை நம்பி அவர் ரூ.1.55 கோடி முதலீடு செய்துள்ளார். ஆனால் அவர்கள் அந்த பணத்தை பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றி வந்துள்ளனர். இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டு, குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.