திமுக அரசுக்கு போதைப்பொருள் வழக்கில் ஜாபர் சாதிக்குடன் தொடர்பு இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு திமுக கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் எடப்பாடி பழனிச்சாமி மனு தொடர்பாக பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் இது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தற்போது எடப்பாடி பழனிச்சாமி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.