இன்றைய காலகட்டத்தில் நெட்வொர்க் இல்லாத இடத்தையும் நபர்களையும் பார்க்க முடியாது. இவ்வாறு ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வளர்ச்சி கண்டு வருகின்றன. அதாவது வாடிக்கையாளர்களின் மனநிலை மற்றும் விருப்பத்திற்கு ஏற்றவாறு தொலை தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் பலவிதமான சலுகைகளை வழங்கிய மாதாந்திர ரீசார்ஜ் திட்டங்களை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன.

அதன்படி இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கான ரீசார்ஜ் கட்டிடத்தை தற்போது உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் இனி தொ 99 ரூபாய் என்ற குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டத்திற்கு பதிலாக 155 ரூபாய் சேவையை பெற்றுக் கொள்ள முடியும். இந்தத் திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடி ஆகும் எனவும் ஒரு ஜிபி இணைய டேட்டா மற்றும் 300 இலவச எஸ் எம் எஸ் சேவையுடன் வருவதாகவும் தெரிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.