ரிஷப ராசி அன்பர்களே….

இன்று நல்லவரின் நட்பு ஏற்படும் நாள் என்று சொல்லலாம். மனைவியின் ஒத்துழைப்பு கண்டிப்பாக மனதிற்குள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். எந்த ஒரு காரணத்தையும் நீங்கள் சிறப்புடன் செயல்படுத்த முடியும். வெற்றி பெறுவதற்கு கடுமையாக உழைப்பீர்கள். பல வழிகளிலும் உங்களுக்கு வருமானம் வர இருக்கிறது. பணிக்கு செல்லும் ஊழியர்கள் தங்கள் உடமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

அவ்வப்போது ஏற்படும் ஞாபகம் மறதியை நீங்கள் சரி செய்து கொள்ள வேண்டும். கோபமான பேச்சை தவிர்க்க பாருங்கள். ஆடம்பரமான செலவை குறைத்துக் கொள்ள வேண்டும். தேவையில்லாத பொருட்கள் மீது உங்களுக்கு ஈர்ப்பு ஏற்படக்கூடும். தயவு செய்து பணத்தை பத்திரப்படுத்திக் சேமிப்பாக மாற்றுங்கள். சின்ன சின்ன முதலீடை நீங்கள் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் அடுத்தவர்களால் ஏதேனும் குழப்பம் இருக்கும் கவனமாக செயல்படுங்கள்.

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வதும் அனுசரித்து செல்வதும் நல்லது. குடும்ப செலவுகளுக்காக சின்னதாக கடன் வாங்க வேண்டிய சூழல் உள்ளது. அதிக நிபந்தனைகளுக்கும் வட்டி தொகைக்கும் கடன்கள் வாங்க வேண்டாம். பிள்ளைகளுக்காக செலவு செய்ய வேண்டிய சூழல் உள்ளது. காலையில் சுறுசுறுப்பாக எழுந்து எந்த ஒரு பணியிலும் ஈடுபடுங்கள். நெருப்பு மற்றும் ஆயுதங்களை பயன்படுத்தும் போது கவனமாக இருங்கள்.

வாகனத்தில் பயணிக்கும் போதும் எச்சரிக்கையுடன் இருங்கள். உறவினர்களிடம் பேசும்போது கவனம் தேவை. பெரியோர் சொல்படி நடப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். இன்று பணவரவு சீராக இருக்கும். கடன் பிரச்சனை ஓரளவுக்கு தீரும். இன்று பெண்களுக்கு சுய கௌரவம் மேலோங்கும். முக அழகு கூடும். செலவுகளை பெண்கள் கட்டுப்படுத்த வேண்டும். வேண்டாத வேலைகளில் ஈடுபட வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள்.

மாலை நேர நடை பயிற்சி முக்கியம். காதலில் அதிக நேரத்தை செலவிட வேண்டாம். இன்று மாணவர்கள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். பெரியவர்களுக்கு மதிப்பு கொடுங்கள். நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். விளையாட்டு துறையில் சாதிக்கும் வாய்ப்பு உள்ளது. கெட்ட சகவாசங்களை விட்டு விடுவது நல்லது. படிப்பதை மட்டுமே குறிக்கோளாக வைத்துக் கொள்ளுங்கள். புதுப்புது விஷயங்களை தெரிந்து கொள்ள பாருங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதே போன்று இன்று காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வழிபட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள் நல்ல பலன் கிடைக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள்