இன்று அயோத்தி ராமர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அரசியல் தலைவர்கள் திரை பிரபலங்கள் என பலர் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கும் முக்கிய பிரமுகர்கள் 20,000 மேற்பட்டவர்களுக்கு அறக்கட்டளை சார்பில் மகா பிரசாதம் வழங்கப்பட இருக்கிறது.

அந்த பிரசாதத்தில் இரண்டு லட்டுக்கள், வெற்றிலை தட்டு, சரயு நதிநீர், அர்ச்சதை ஆகியவை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோன்று நிகழ்ச்சியில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு கோவில் வளாகத்திலேயே உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.