உத்திரபிரதேச மாநிலம் அயோத்திய பிரம்மாண்டமாக 2000 கோடி செலவில் ராமர் கோவில் கட்டப்பட்டது. இந்த கோவில் கும்பாபிஷேகமானது ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. மேலும் இந்த விழாவில் சுமார் 11 ஆயிரம் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

தமிழகத்திலிருந்து 23 கேரட்டில் சுமார் 600 முதல் 700 கிராம் தங்கம் கொண்டு தயாரிக்கப்பட்ட வில்லும் அம்பும் அயோத்திக்கு அனுப்பப்படுகிறது. மேலும் பொது மக்களுக்கு இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சென்னையிலிருந்து அயோத்திக்கு விமான சேவை தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.