அயோத்தி ராமர் கோவிலில் பொதுமக்கள் ஜனவரி 23ஆம் தேதியிலிருந்து தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள் என்று ஸ்ரீ ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார். மேலும் பக்தர்களால் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக போகும் தரிசன நேரத்தை இரவிலும் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் குளிரையும் பொருட்படுத்தாமல் திரளான எண்ணிக்கையில் வரும் பக்தர்களை சமாளிக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.