உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் பத்து மாதங்களை தாண்டியும் நீடித்து வருகிறது. இந்த போரில் இரு நாட்டைச் சேர்ந்த வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் சிலர் சிறை படிக்கப்பட்டு, பின் விடுவிக்க படுகின்றனர். இந்நிலையில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியீட்டுள்ள செய்தியில்  கூறப்பட்டுள்ளதாவது, உக்ரைன், ரஷ்யா இடையேயான போரின் ஒரு பகுதியாக நடைபெற்று வரும் சிறை கைதிகள் பரிமாற்றத்தின்படி உக்ரைனால் சிறைபிடிக்கப்பட்ட 50 ரஷ்ய ராணுவ வீரர்கள் சொந்த நாட்டிற்கு திரும்பி உள்ளனர். பேச்சுவார்த்தை நடத்தியதன் மூலமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது 36-வது கைதிகள் பரிமாற்ற நிகழ்வு ஆகும் என கூறியுள்ளனர்.

இதே போல் உக்ரைன் நாட்டு அதிபர் அலுவலக தலைவர் ஆன்ட்ரி எர்மோக் கூறியதாவது, ரஷ்யாவால் கைதிகளாக சிறைபிடிக்கப்பட்ட 50 உக்ரைன் ராணுவ வீரர்கள் நாட்டிற்கு திரும்பி உள்ளனர்.  அதன்படி செர்னானோபில் அணு உலை, மரியுபோல்,கெர்சன்,கீழ்,டோனெட்ஸ்க், பகுதிகளில் பிடிபட்ட வீரர்கள் உக்ரைனுக்கு திரும்பி உள்ளனர் என அறிக்கை தெரிவிக்கிறது. இது கடைசி பரிமாற்றம் இல்லை. எங்களுடைய அனைத்து மக்களையும் திரும்பப்பெறும் பணி தொடர்ந்து நடைபெறும். அதனை நாங்கள் நிறைவேற்றுவோம் என கூறியுள்ளார். கடந்த சனிக்கிழமை நள்ளிரவு முதல் ரஷ்யா அறிவித்திருந்த போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளது. இதனை தொடர்ந்து கார்கிவ் நகரில் உள்ள மெரீபா பகுதியின் மீது இரண்டு ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.