மேற்கு வங்கத்தின் ஒண்டா பகுதியில் இரண்டு சரக்கு ரயில்கள் ஒன்றோடு ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த ரயில் விபத்தில் 12 பெட்டிகள் தலைகுப்பறக் கவிழ்ந்தன. இதில் ரயில் எஞ்சின் உட்பட பெட்டிகள் உருக்குலைந்து உள்ளன. பயணிகள் ரயில் இப்படியான விபத்தில் சிக்கி இருந்தால் பலத்த உயிர் சேதம் ஏற்பட்டிருக்க கூடும்.

இந்த விபத்தை தொடர்ந்து சுமார் 14 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 3 ரயில்கள் வேறு பாதைக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. ரயில் தண்டவாளங்களை சீரமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.