இந்திய ரயில்வேயின் ஆயிரக்கணக்கான ரயில்களில் தினசரி கோடிக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொள்கின்றனர். இந்திய ரயில்வேயானது தன் பயணிகளுக்கு சிறந்த சேவைகளை வழங்க பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.

சில சந்தர்ப்பங்களில் இந்திய ரயில்வே தன் பயணிகளுக்கு திட்டமிடப்பட்ட சேவைகளை வழங்க முடியவில்லை எனில், அத்தகைய சூழ்நிலையில் அவர்களின் கட்டணத்தை திருப்பி தந்துவிடும். இந்த நிலையில் ஏசி சார்ந்த சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் கூட ரீபண்ட் பெறலாம். ஏசி வகுப்பில் டிக்கெட் முன்பதிவு செய்து இருந்தால் பயணத்தின் போது ஏசி வேலை செய்யாமல் போனால் ரயில்வே விதிகளின் அடிப்படையில் பணத்தை திரும்பப் பெறலாம்.